கோவையில் நடைபெற்ற அகில இந்திய டென்னிஸ் போட்டியில் தமிழகத்தின் அவினாஷ், ஸ்வேதா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர். ப்ரோ செர்வ் டென்னிஸ் அகாதெமி மற்றும் ஆயில் நேச்சுரல் கேஸ் கமிஷன் சார்பில் 12, 14 வயதுக்குள்பட்டோருக்கான டென்னிஸ் போட்டி கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்து கொண்டனர்.
14 வயதுக்குள்பட்ட ஆடவர் இறுதி ஆட்டத்தில் தமிழகத்தின் அவினாஷ் 4-6, 8-6, 6-3 என்ற செட் கணக்கில் தமிழக வீரர் யூனிசை வென்றார்.
மகளிர் பிரிவில் தமிழக வீராங்கனை ஸ்வேதா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஆந்திரத்தின் ஷேக் அம்ரீனைத் தோற்கடித்தார்.
12 வயதுக்குள்பட்ட ஆடவர் பிரிவில் கேரள வீரர் சூரஜ் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் குஜராத்தின் அன்விட் பேந்த்ரேயை வென்றார்.
மகளிர் பிரிவில் ஆந்திர வீராங்கனை ஷேக் அம்ரீன் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தமிழக வீராங்கனை ஸ்வேதாவை வென்றார்.
தினமணி
No comments:
Post a Comment