பீஹாரின் கத்திஹார் மாவட்டத்தில் இரு இனத்தவரிடையே மத ஊர்வலம் சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில், மூன்றே வயதான ராஜ் குமார் ஜா என்கிற குழந்தை மீது கலகம் விளைவித்தல், கொலை முயற்சி ஆகிய குற்றங்கள் காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றங்கள் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் காலக் கட்டத்தில் அக்குழந்தை தவழும் நிலையில் தான் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மணிஹரி காவல் அதிகாரி "பெயர் குழப்பத்தால் இது நிகழ்ந்திருக்கும்" என்று சொல்லியுள்ளார்.
மேலதிகாரிகள் விரிவான அறிக்கையை கோரியுள்ளனர்.
முன்னர் ஒருமுறை ஆறே வயதுடைய சிறுவன் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டு, நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிகழ்வும் பீகாரில் நடந்துள்ளது.
மேலும் படிக்க....
No comments:
Post a Comment