இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமிலுள்ள பிரிவினை கோரும் கிளர்ச்சியாளர்கள் இரண்டு முக்கிய உள்ளூர் அரசியல்வாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர்.
வடக்கு கச்சார் மலைப் பகுதிகான தன்னாட்சி சபையின் தலைமை நிர்வாகி பூர்னேண்து லாங்த்ஸா அவார்கள் மாவட்ட நிர்வாகத்தின் தலைமையகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது நெருங்கிய சகாவான நிண்டு லாங்த்ஸாவும் கொல்லப்பட்டுள்ளார்.
இம்மாதம் 12 ஆம் தேதி அந்த மலைப் பகுதி தன்னாட்சி சபைக்காக நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிண்டு லாங்க்த்ஸா வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.
கறுப்பு விதவைகள் என்கிற பழங்குடியினர் அமைப்பின் சார்பான பேச்சாளர் என அடையாளம் கூறிக் கொண்ட ஒருவர், தமது அமைப்பினரே இந்தக் கொலைகளை செய்ததாக கூறியுள்ளார்.
- பிபிசி தமிழ்
1. Zee News - CEM, EM shot dead in the run-up to NC hills poll
2. BBC NEWS | South Asia | Policemen die in 'rebel' attack
No comments:
Post a Comment