ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான பிரதீபா பாடீல் தனது வேட்புமனுக்களை பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ்தலைவர் சோனியாகாந்தி உடன் வர குடியரசுதலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரி மக்களவை செயலர் பி டி ட்டி ஆசாரியிடம் சமர்ப்பித்தார். லாலுபிரசாத், ராம்விலாஸ் பாஸ்வான், டி ஆர் பாலு, சீதாராம் யெச்சூரி, குருதாஸ் தாஸ்குப்தா ஆகியோரும் உடனிருந்தனர். தவிர நடுவண் அரசு அமைச்சர்கள் பிரணப் முகர்ஜி, சிவ்ராஜ் பாடீல், அர்ஜுன் சிங், ஏகே ஆன்டனி, சுஷில்குமார் ஷிண்டே, பிரிதிவிராஜ் சவான் ஆகியோரும் மகாராட்டிர முதல்வர் விலாஸ ராவ் தேஷ்முக், தில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் ஆகியோரும் பங்குபெற்றனர். பாடீலின் கணவர் தேவ்சிங் செகாவத் அவருடன் வந்திருந்தார். முன்னதாக தனது குடும்பத்தினருடன் இராஜ்காட் சென்று காந்தி சமாதியில் தேசபிதாவிற்கு அஞ்சலி செலுத்தினார்.
The Hindu News Update Service
No comments:
Post a Comment