பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டா.இராம்தாஸ் நிருபர்களிடம் பேசுகையில் குடியரசுத்தலைவர் பதவிக்கு ஐக்கிய முன்னேற்றக் கூட்டணியின் வேட்பாளராக ஒரு பெண்மணியை அறிவித்தபின்னர் அவர் வெற்றிக்கு உழைப்பதை விட்டு மறுபரிசீலனை செய்ய முடியாது என்றார். கலாம் அவர்கள் கல்விப்பணியில் ஈடுபடப்போவதாகவும் இரண்டாம் முறை போட்டியிடப் போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.அவரும் தன்முடிவை மாற்றிக் கொள்ளமாட்டார் என நம்புவதாகவும் அவர் கூறினார். நிருபர்கள் சிவாஜி திரைப்படம் பற்றியும் அப்படம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியிருப்பது பற்றியும் கேட்டபோது பதில் கூற மறுத்துவிட்டார்.
மேலும்...The Hindu News Update Service
No comments:
Post a Comment