Tuesday, June 12, 2007

நீதிபதிகள் இனி 'My Lord' இல்லை!

கேரள உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் எடுத்துள்ள தீர்மானத்தின்படி நீதிபதிகள் இனி My Lord என்றோ Your Lordship என்றோ விளிக்கப்படமாட்டார்கள். பகரமாக, கண்ணியத்திற்குரிய என்றோ 'கண்ணியம் வாய்ந்த அவையோர்' என்றோ அழைக்கப்படுவார்கள்.

உச்ச; உயர்நீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு விளிக்கப்படுகையில் கீழ்நீதிமன்றத்தார் 'ஐயா' என்றோ அதற்கிணையான சொல்லாலோ விளிக்கப்பெறுவர் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

காலனியாதிக்க கால நடைமுறை மரபுகளில் மாற்றம் வேண்டி கடந்த டிசம்பர் மாதம் இந்திய பார் கவுன்சில் எடுத்த முடிவுக்கும், தொடர்ந்த வழிகாட்டுதலுக்கும் ஏற்ப இவ்வாறு கேரள வழக்குரைஞர்கள் முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

கேரள வழக்கறிஞர்களே இம்மாற்றத்தை செயற்படுத்துவதில் முன்னோடிகளாக இன்றுமுதலே இதை நடைமுறைப்படுத்துகின்றனர். நடை, உடைகளில் இல்லாவிட்டாலும், விளிக்கின்ற அடைமொழிகளில் நல்ல மாற்றம் வந்தமைக்கு அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும் படிக்க...

No comments:

Post a Comment