இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அசாம் மற்றும் மிசோராம் மநிலங்களின் எல்லைப் பகுதியில், ஆக்ரோசம் கொண்டு, 8 கிராமவாசிகளைக் கொன்ற பழக்கப்படுத்தப்பட்ட இரண்டு யானைகளைப் பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளார்கள்.
மரங்களை இழுத்துச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட இந்த யானைகள், மதங்கொண்டு, மூங்கிலாலும், வைக்கோலாலும் அமைக்கப்பட்ட பல குடிசைகளைத் துவம்சம் செய்தன. யானைகள் இயற்கையாக வாழும் இடங்களை மனிதர் ஆக்கிரமிப்புச் செய்வதால், கடந்த காலங்களில் காட்டு யானைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் இப்படியாகப் பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் அட்டகாசம் செய்வது மிகவும் அரிதாகும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
BBC Tamil
Rogue elephants shot after killing eight in Assam | Reuters.com
No comments:
Post a Comment