குப்பைத் தொட்டி ஒன்றில் கைவிடப்பட்டிருந்த 75 வயதான சின்னம்மாள் பழனியப்பன் என்னும் மூதாட்டியின் உறவினர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழ் நாடு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தன்னுடைய பேரன்களே தன்னை வீட்டில் இருந்து கொண்டுவந்து குப்பைத் தொட்டியில் போட்டதாக அந்த மூதாட்டி கூறியுள்ளார்.
பெற்றோரை இவ்வாறு தவிக்கவிடுவது மன்னிக்க முடியாதக் குற்றம் எனவும்,இவ்வாறு செய்பவர்களை தண்டிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்றும் கூறுகிறார் தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை அமைச்சர் டாக்டர் பூங்கோதை தெரிவித்தார். கூட்டுக் குடும்ப முறை குறைந்துள்ளதும் வாழ்க்கை முறை மாறியுள்ள்மை போன்றவையே இவ்வாறு முதியவர்கள் கவனிக்கப்படாமல் விடப்படுவதற்கு காரணம் என்றும் அமைச்சர் பூங்கோதை கூறுகிறார்.
முதியோர்களுக்கான மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும் அரசு சிந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
BBC Tamil
BBC NEWS | South Asia | India grandmother 'dumped on tip'
'Trashed' granny found at dump - CNN.com
No comments:
Post a Comment