சிங்கையில் விசாக்காலம் முடிந்தும் தங்கியதால் சிறையில் வாடும் தமிழர்களுக்காக மத்திய அமைச்சர் டி ஆர் பாலு வெளியுறவு அமைச்சர் பிரணப் முகர்ஜியிடம் அவர்களை் விடுதலையிட சிங்கை அரசிடம் தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளியுறவு அமைச்சின் வெவ்வேறு நிலைகளில் இது பற்றி பேசி ஒரு முடிவு காணவேண்டும் என விரும்பினார். சிறைக்கைதிகளின் உறவினர்கள் பலமுறை முறையிட்டும் சிங்கப்பூரில் உள்ள இந்தியதூதரகத்திடமிருந்து திருப்திகரமான செயல்பாட்டை காணமுடியவில்லை என அவர் அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர குற்றமிழைத்து தண்டனைக் காலத்தைக் கடந்தவர்களும் விடுவிக்கப் படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இது விதயமாக வெளியுறவு அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்துள்ளதாக அவரது அறிக்கை கூறுகிறது.
The Hindu News Update Service
No comments:
Post a Comment