இப்படத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் நன்கொடை கேப்பிடேசன் பணம் வாங்குவது குறித்து கூறுவதாக ஒரு காட்சி வருகிறது.
படத்தின் நாயகனான சாப்ட்வேர் என்ஜீனியர் ரஜினிகாந்த் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து, வில்லனான பல்கலைக் கழக வேந்தர் ஆதிகேசவனுடன் ஆலோசனை நடத்துகிறார்.
அப்போது சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருடைய படங்களுக்கு மத்தியில் அவர்கள் பேசுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் குற்றம் செய்யும் வில்லன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியினரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த காட்சி அமைந்துள்ளது.
இதனால் இந்த படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். அத்துடன் ரூ.50 கோடி நஷ்ட ஈடாக தர உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை செயலாளர், சென்சார் போர்டு, நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், இயக்குனர் ஷங்கர், தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த மனு நாளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
தாட்ஸ்தமிழிலிருந்து நேரடி மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால்தான் சந்திரபாபு நாயுடு படத்தைப் பாராட்டிப் பேசினாரா ;)
ReplyDeleteBehind The Scene: Cong targets "Sivaji" Naidu!
Baba,
ReplyDeleteஅப்ப கலைஞர் சொன்ன பிரமாண்டம்?..
Ha Ha Ha..
கலைஞர் காங்கிரஸ் தலைவராகவா இருக்கிறார் ;))
ReplyDelete