எம்.பி.யாக பதவி ஏற்ற பின் கனிமொழி நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நான் எம்.பி.யாக பொறுப்பு ஏற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது எனக்கு நிறைய பொறுப்புகள் உள்ளது. அவற்றை நிறைவேற்ற வேண்டுமே என்ற பயமும் உள்ளது.
அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்து வதே எனது லட்சியம்.
தி.மு.க.வில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்.
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். பெண் உரிமைக்காகவும், பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் பாடு படுவேன்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.
நன்றி: மாலைமலர்
No comments:
Post a Comment