மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் சகோதரர் ஈவிகேஎஸ் மதிவாணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது: சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிங் கமிட்டியில் நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பு வகித்து வருபவர் மதிவாணன். அதே அலுவலகத்தில் சமூக நல அலுவலராகப் பணிபுரிந்து வருபவர் அருண்.
இந்நிலையில் அருணை ஜாதி பெயரைச் சொல்லி மதிவாணன் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி கோயம்பேடு காவல் நிலையத்தில், அருண் புகார் செய்தார். புகாரின்பேரில் மதிவாணன் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி
No comments:
Post a Comment