Wednesday, July 18, 2007

நடிகர் விக்ரம் வீடு இடிந்து ஒருவர் பலி - படம்


திருவான்மியூரில் விக்ரம் கட்டி வரும் வீடு.



திருவான்மியூர், ஜூலை 18-
நடிகர் விக்ரம் கட்டி வரும் புதிய வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி இறந்தார். ஒருவர் படுகாயமடைந்தார்.
திருவான்மியூர் கலா«க்ஷத்ரா காலனி அருண்டேல் பீச் ரோட்டில் நடிகர் விக்ரம் பிரம்மாண்டமாக புதிய வீடு கட்டி வருகிறார். 3 மாடிகள் கொண்ட கட்டிட பணி கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கட்டிடப் பணிக்காக வெளியூரில் இருந்து கூலித் தொழிலாளர்கள் இங்கு வந்து வேலை செய்து வருகின்றனர். விழுப்புரம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த நாகப்பன் (42) என்பவர் குடும்பத்துடன் அருகில் குடிசை போட்டுக் கொண்டு வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை கட்டிடத்தில் 4 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது புதிதாக கட்டப்பட்டிருந்த சுவர் ஒன்று திடீரென்று இடிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் நாகப்பன் புதைந்தார். இதை பார்த்த அவரின் மனைவி செல்வி மற்றும் மகன்கள் ஓடிவந்து கதறி அழுதனர்.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் நாகப்பன் இறந்தார். நாகப்பனின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஐயனார் என்பவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் சேர்த் துள்ளனர்.
திருவான்மியூர் போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி & படம் :

நன்றி: "தமிழ் முரசு"

No comments:

Post a Comment