நடுவண் அரசின் மனிதவள அமைச்சர் அர்ஜுன் சிங் மீதும் அவரது மனைவி பீனா சிங், மகன் அபிமன்யூ சிங், பேரன் அபிஜீத்சிங் ஆகியோரின் மீதும் வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்று மொரதாபாத் காவல்நிலையத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதுபற்றி கேட்டபோது அமைச்சர் தான் குடும்ப விதயங்களில் இருந்து விலகி இருப்பதாகவும் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறினார்.
அர்ஜுன்சிங்கின் பேரனின் மனைவி பிரியங்காவிடம் அவரது கணவர் குடும்பத்தினர் மெர்சிடீஸ் காரும் அடுக்கக குடியிருப்பும் கேட்டு துன்புறுத்தியதாக பிரியங்காவின் தந்தை மத்வேந்தர் சிங் கொடுத்த புகாரின் பேரில் இவ்வழக்கு பதியப் பட்டுள்ளது.
IBNLive.com > Dowry case against Arjun Singh for 'demanding' Mercedes : Arjun Singh, Dowry, Madhvendra Singh
No comments:
Post a Comment