ஆதாயம் தரும் இரட்டைப்பதவி சட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ., எம்.பியான கிருஷ்ணமிராரியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
ம.பி.யைச் சேர்ந்த பா.ஜ.க, எம்.பி., கிருஷ்ணமிராரி. இவர் அம்மாநில நாடாளுமன்ற குழுவின் தலைவராகவும் உள்ளார். அதனால் கிருஷ்ணமிராரி ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிப்பதாக இவர் மீது, அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ, ஜமுனாதேவி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்தார். இம்மனு மீது விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், கிருஷ்ணமிராரியின் பதவியைப் பறிக்க குடியரசுத்தலைவருக்குப் பரிந்துரை செய்தது. இப்பரிந்துரையை ஏற்று கிருஷ்ணமிராரின் பதவி பறிப்புக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்
தினமலர்
No comments:
Post a Comment