மொரிசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவரை சந்திக்க உள்ளார், பீகார் முதல்வர் நிதிஷ் குமார்; அவருக்கு பரிசாக, கங்கை ஜலம், அனுமான் பாசுரம் அடங்கிய புத்தகத்தை அளிக்கிறார்.
ஐந்து நாள் பயணமாக மொரிசியஸ் போகிறார் நிதிஷ். அவருடன், சில அமைச்சர்களும் போகின்றனர். மொரிசியசில் நடக்கும் சர்வதேச போஜ்புரி மொழி பேசும் பீகாரிகள் மாநாடு நடக்கிறது. அதில், நிதிஷ் பங்கேற்கிறார்.
மொரிசியஸ் நாட்டு பிரதமர் ராம்கூலமுக்கு, தன் பரிசாக, கங்கை ஜலத்தை, குடத்தில் எடுத்துச் செல்கிறார். ராம்கூலமுக்கு பிடித்தமான அனுமான் பாசுரங்கள் அடங்கிய புத்தகத்தையும் அளிக்கிறார். இதன் ஆயிரம் பிரதிகளை அவரிடம் தந்து, பலருக்கு பரிசாக அளிக்க திட்டமிட்டுள்ளார். மொரிசியஸ் பயணம் குறித்து, பீகார் கலாசாரத்துறை அமைச்சர் ஜனார்த்தன் சிங்வி கூறியதாவது: நாங்கள் கங்கை ஜலத்தை குடத்தில் கொண்டு செல்கிறோம். மொரிசியசிலும், கங்கா தலாப் என்ற நதி உள்ளது. அங்கு, கங்கை ஜலத்தை கொட்டுவது புனிதம் என்று கருதப்படுகிறது. அதனால், இதை கொண்டு சென்று, பிரதமரிடம் அளிப்போம். பீகார் உட்பட சில வட மாநிலங்களில், போஜ்பூரி மொழி பேசும் மக்கள் வசிக்கின்றனர். இந்த மொழி பேசுவோர், பல நாடுகளுக்கு ஒரு காலத்தில் அதிக அளவில் சென்று தங்கி விட்டனர். அவர்கள் சார்பில் தான் மொரிசியசில் மாநாடு நடத்தப்படுகிறது.
மொரிசியசில், இப்போது, போஜ்பூரி மக்களின் வீட்டு வாசலில், அனுமான் கொடி பறக்கும். மொரிசியஸ், மேற்கிந்தீஸ் உட்பட 12 நாடுகளில் போஜ்பூரி மொழி பேசும் பீகாரிகள் இருக்கின்றனர். முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், 30 பேர் கொண்ட குழுவினர், மொரிசியஸ், 'பீகார் மகோத்சவ்' மாநாட்டில் பங்கேற்கிறோம்.
இவ்வாறு ஜனார்த்தன் சிங்வி கூறினார்.
தினமலர்
Bihar to market brand Bhojpuri to woo diaspora in Mauritius :: News Channel
No comments:
Post a Comment