குடியரசுத்தலைவர் தேர்தலில் காங்.கூட்டணி வேட்பாளர் பிரதீபாபட்டீல் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
குடியரசுத்தலைவர் தேர்தலில் ஐக்கிய மற்போக்கு கூட்டணி சார்பில் இராஜஸ்தான் முன்னாள் கவர்னர் பிரதீபாபட்டீல் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை ஏற்கனவே தாக்கல் செய்து விட்டார்.
இந்த நிலையில் பிரதீபா பட்டீலின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றம் மனோகர்லால் சர்மா என்பவர் மனுதாக்கல் செய்திருக்கிறார்.
அவர் தனது மனுவில் பிரதீபா பட்டீலும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளனர். எனவே அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அவர் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
No comments:
Post a Comment