இன்று காலை கோவா விமானநிலையத்தில் உள்ள கோ ஏர் விமான நிறுவன அலுவலகத்தில் எழுந்த தீ விபத்தில் அந்த அலுவலகம் முற்றிலும் எரிந்து சாம்பலானது. காலை 8.30க்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் கண்டறிந்து கோவா மாநில தீ மற்றும் அவசரகால துறை, இந்திய கடற்படை மற்றும் மர்மகோவா துறைமுக நிர்வாகத்தினரின் தீயணைப்பு வண்டிகள் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தன. தீயினால் உயிர்சேதம் எதுவும் அறியப்பட வில்லை.
The Hindu News Update Service
No comments:
Post a Comment