சென்னை நகரில் போலீசார் கடந்த 2 நாட்களாக நடத்தி வரும் அதிரடி சோதனையில் 700க்கும் அதிகமான ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கிய ரவுடிகள் வேட்டை நேற்று இரவும் நீடித்தது. நகரின் முக்கிய சாலைகளில் தடுப்புகளை அமைத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது ரவுடிகள், கேடிகள் என 700க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தினமலர்
No comments:
Post a Comment