ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி (UNPA) இன்று நடந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் இரு வேட்பாளர்களையும் சமநிலையில் பாவித்து வாக்களிப்பிலிருந்து விலகியிருக்கவும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளரை ஆதரிக்காமல் தங்கள் வேட்பாளரை நிறுத்துவது எனவும் முடிவு செய்துள்ளது. தனது வேட்பாளருக்கு பிஜேபி அணியின் ஆதரவை வேண்டப்போவதில்லை எனவும் தாங்கள் தோற்பது உறுதியாக இருந்தாலும் தங்கள் அடையாளத்தை பதிவு செய்யும் முகமாக இந்த தேர்தலில் வேட்பாளரை நிறுத்தப் போவதாகவும் கூறினர். இடதுசாரிகள் நடுவண் அரசிற்கு கொடுத்துவரும் ஆதரவை விலக்கிக் கொண்டால் அவர்கள் வேட்பாளரை ஆதரிப்போம் என நிருபர்களிடையே அதிமுகவின் தலைவர் ஜெயலலிதா கூறினார்.
The Hindu News Update Service
No comments:
Post a Comment