அமெரிக்காவின் உட்டாவ் பகுதியில் ஒரு நிலக்கரி சுரங்கத்துக்குள் வெள்ள நீர் புகுந்து அந்த சுரங்கம் இடிந்து விழுந்தது.
சுரங்கத்துக்குள் வேலை செய்து கொண்டிருந்த தொழி லாளர்களில் 6 தொழி லாளர்களை 3 வாரங்கள் ஆகியும் மீட்க முடிவில்லை. 2000 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடும் அவர்களை மீட்க மேல் பகுதியில் இருந்து இதுவரை 6 ஆழ் துளைகள் போட்டனர். ஆனாலும் மீட்க முடியவில்லை. அவர்கள் இருக்குமிடமும் தெரியவில்லை.
இந்த நிலையில் 7-வதாக மீட்பு படையினர் ஒரு துளை போட்டு அதில் நவீன கேமரா பொருத்தப்பட்ட ரோபாட்டை செலுத்துகிறார்கள். துளை வழயாக இந்த போராட் 1000 அடி ஆழத்தில் சென்று தொழிலாளர்கள் இருக்கும் இடத்தை படம் பிடித்து அனுப்பும். அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா.. இருந்தால் அவர்களை எப்படி மீட்க வேண்டும் என்ற தகவலையும் இந்த ரோபாட் தெரிவிக்கும்.
No comments:
Post a Comment