அமீரகத்தில் பொதுமன்னிப்பு பெற்ற 45,000 இந்திய தொழிலாளர்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் சட்ட விரோதமாக இருந்து வந்த 45,000 இந்திய தொழிலாளர்களுக்கு இந்திய தூதரக அலுவலகங்கள் அவசர சான்றிதழ் வழங்கியுள்ளதாக இந்திய வெளிநாடு வாழ் இந்திய நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தொலைபேசி மூலம் கல்ப் நியூஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இதுவரை 28,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தாயகம் திரும்பி விட்டனர். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்க சிறப்பு விமான சேவை ஏற்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
பொதுமன்னிப்பு பெற்ற தொழிலாளர்களில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். அதனைத் தொடர்ந்து கேரளா,தமிழ்நாடு ஆகியவை.
http://www.gulfnews.com/nation/Immigration_and_Visas/10148918.html
Special flights to take home amnesty seekers
No comments:
Post a Comment