துபாய் வணிகரின் மகன் ஹைதராபாத் குண்டுவெடிப்பில் பலி
துபாயில் தொழில்புரிந்து வரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த முஹம்மது அலி என்பவரின் 16 வயது மகன் முஹம்மது யஹ்யா கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் பலியான செய்தியறிந்து உடனடியாக தாயகம் திரும்பினார். இச்செய்தி அலியின் குடும்பத்தினரை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது.
முஹம்மது யஹ்யா ஹைதராபாத்தில் உள்ள சைதன்யா இளநிலை கல்லூரியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையடுத்து யஹ்யாவின் குடும்பத்தினர் மருத்துவமனையில் படுகாயமடைந்து இருப்பதாக தகவல் கிடைத்தையடுத்து அங்கு சென்ற பொழுது யஹ்யா பிணமாக கிடந்தது கண்டு மிகுந்த அதிர்ச்சியுற்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான ஆந்திர மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.godubai.com/gulftoday/article.asp?AID=34&Section=Home
Dubai resident's son among the dead in India blasts
No comments:
Post a Comment