இந்தோ-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டின் பின்னணியில் எழுந்துள்ள சர்ச்சையையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு (Politburo) வார இறுதியில் கூட்டப்படுகிறது. பிரதமருடன் எழுந்துள்ள மோதலுக்குப் பிறகு முழு அங்கத்தினர்களும் பங்கேற்கும் பொலிட் பீரோவின் கூட்டம் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இன்று பிரதமரின் உரையின் போது இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இரு அவைகளிலும் வெளிநடப்பு நடத்தி தங்கள் எதிர்ப்பை தீவிரமாக தெரிவித்தன. இந்த உடன்பாட்டின் பின்விளைவுகளை தலைமைக்குழு ஆராயும் என சீதாராம் யெச்சூரி கூறினார். தவிர மக்களின் பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, விவசாயிகளின் வறுமை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியனவற்றை எவ்வாறு பிரச்சாரம் செய்து ஆளும் கூட்டணிக்கு தலைவலி ஏற்படுத்துவது என்பதும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
DNA - India - Meeting of top CPI(M) leadership this weekend - Daily News & Analysis
No comments:
Post a Comment