நடுவண் அரசு மாநிலத்திற்கு வெள்ள நிவாரண உதவி கொடுக்கப் படாததிற்கும் பாலக்காடு இரயில்வே வட்டம் பிரிக்கப்பட்டு சேலம் வட்டம் உருவாக்கப் படுவதையும் எதிர்த்து முழு கேரள அமைச்சரவையும் வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் திகதி தில்லியில் ஆர்பாட்டம் நடத்தவிருக்கிறது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய முதல்வர் அச்சுதானந்தன் இந்த தகவலைத் தெரிவித்தார். இந்த போராட்டத்தில் மாநில எம் பி களும் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வர் என்றும் கூறினார். ஆகஸ்ட் 10 அன்று துவங்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் மாநில எம் பிக்கள் இப்பிரச்சினையை எழுப்ப கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
The Hindu News Update Service
No comments:
Post a Comment