தமிழக அரசு நடத்த இருக்கும் கேபிள் டிவி நிறுவனத்தால் தனியார் கேபிள் டிவி உரிமையாளர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். தனியார் ஒருவரை போல அரசும் ஒரு கேபிள் டிவி நடத்த இருக்கிறது. இது கேபிள் டிவி இணைப்பை பெற்று கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு வழங்கும் பணியை மட்டுமே செய்யும். தமிழக அரசு கேபிள் டிவி கார்பரேஷன் என்பது தொலைக்காட்சியை நடத்தும் நிறுவனம் அல்ல தனியார் வீடுகளுக்கு நேரடியாக இணைப்பு வழங்கும் நிறுவனம் அல்ல.
கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். யாருடைய தூண்டுதலாலோ பீதி அடைய தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment