1998இல் நடந்த சிங்காரா மான் வேட்டை வழக்கில் தனது பிணைமனு நிராகரிக்கப்பட்ட பின்னர் காவலர்களிடம் சரண் அடைவதற்காக ஜோத்பூர் வந்த இந்தி நடிகர் சல்மான்கானை விமானநிலையத்திலேயே கைது செய்தனர்.
முன்னதாக தனது குடும்பத்தினருடனும் வழக்கறிஞருடனும் காலை 1130 மணி ஜோத்பூர் விமானத்தில் புறப்படவிருந்த சல்மான் நிருபர்களிடம் பேசும்போது தன்மீது பிணையில் எடுக்கமுடியாத கைது ஆணை பிறப்பிக்கபட்டிருப்பதால் தனது சட்ட ஆலோசகர்கள் சரண் அடையுமாறு அறிவுறுத்திருக்கிறார்கள் எனக் கூறினார். ஒரு சட்டத்தை மதிக்கும் குடிமகனாக நானே அங்கு சென்று சரண் அடைவேன் என்றும் மேலும் கூறினார்.
Salman Khan arrested at Jodhpur airport-Politics/Nation-News-The Economic Times
No comments:
Post a Comment