மக்களுக்கு சேவை புரியவே அரசியல் - நடிகர் சரத்குமார் பேட்டி
துபாய் : மக்களுக்கு சேவை புரியவே அரசியலில் ஈடுபட்டு வருகிறேன் என்று நடிகர் சரத்குமார் ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல் கைமாவில் இருந்து வானொலி சேவையை வழங்கி வரும் சக்தி எப்.எம். க்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
தான் ஒரு இளநிலை கணிதப் பட்டாரி எனவும், இப்படிப்பின் மூலம் தான் பத்தாயிரமோ, இருபதாயிரமோ மாதந்தோறும் சம்பாதித்திருக்கலாம். ஆனால் தான் கோடிக்கணக்கில் சினிமாவின் மூலம் சம்பாதிப்பதற்கு தமிழ் ரசிகப் பெருமக்கள் தான் காரணம்.
அத்தகைய தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய திட்டமிட்டு திமுகவிலும் அதனைத்த் தொடர்ந்து அதிமுகவிலும் அங்கம் வகித்தேன். தனது சுயமரியாதைக்கு பங்கம் ஏற்பட்டதையடுத்து அக்கட்சிகளில் இருந்து விளகினேன்.
எதிர்வரும் ஆகஸ்ட் 31 ந் தேதி புதுக்கட்சி துவங்க இருப்பதாகத் தெரிவித்தார்.
இளம் வயதில் தனது தந்தையிடமிருந்து பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனோபாவத்தை வளர்த்துக் கொண்டதே பொது சேவையில் ஆர்வம் கொள்ளக் காரணமாக அமைந்தது என்றார்.
நாளுக்கு நாள் புதுப்புது நடிகர்கள் வந்தாலும் தனக்கு தற்போது ஆறு படங்கள் கைவசம் இருப்பதாகக் குறிப்பிட்டார். அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் ஒரு குறிப்பிட்ட நேரம் வரும்போது எதில் முழு நேரம் ஈடுபட வேண்டும் என்பதை தான் முடிவெடுப்பேன் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment