கொத்ரோக்கியை கோட்டைவிட்ட சிபிஐயிற்கு மற்றுமொரு ஏமாற்றமாக தில்லி உயர்நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சொரெனை அவரதி தனிச்செயலர் சசிநாத் ஜாவை கொலைசெய்த குற்றத்திலிருந்து போதிய சாட்சிகள் இல்லாததால் விடுவித்தது. கீழ்நீதிமன்றம் வித்திதிருந்த ஆயுள்தண்டனையை இரத்துசெய்த நீதியரசர்கள் ஆரெஸ் சோதி மற்றும் எஹ் ஆர் மல்ஹோத்ரா அடங்கிய பென்ச் சிபிஐயின்சாட்சிகளை காட்டமுடியாத 'இயலாமை'யை மிகவும் மோசமாக எடுத்துரைத்தது. அவருடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற நால்வரையும்-- நந்தகிஷோர் மேத்தா, சைலேந்திர
பட்டாசார்யா,பசுபதிநாத் மேத்தா, அஜய்குமார் மேத்தா-- அதே காரணங்களால் விடுதலை செய்தது.
The Hindu News Update Service
No comments:
Post a Comment