Thursday, August 9, 2007

ஹைதராபாத்தில் தஸ்லீமா நஸ் ரீன் தாக்கப்பட்டார்

வங்கதேச எழுத்தாளரான தஸ்லீமா நஸ்ரின் ஹைதராபத்தில் தாக்கப்பட்டார். தஸ்லீமா எழுதிய Shodh-இன் தெலுங்கு மொழியாக்க வெளியீட்டு விழாவில் அவர் மீது நாற்காலிகள் மீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மஜ்லிஸ் இட்டாஹூதுல் முஸ்லிமின் கட்சி (Majlis Ittehad-ul-Muslimeen - MIM) சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் ப்ரியரஞ்சன் தாஸ்முன்ஷி இந்தத் தாக்குதலை கண்டித்துள்ளார்.

நஸ்-ரீன் தலைக்கு ஐந்து லட்சம் ரூபாய் தருவதாக மதவாத அமைப்புகள் சில அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முந்தைய சற்றுமுன்...: இந்து-முஸ்லீம் கலப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும்: தஸ்லீமா

Taslima Nasrin attacked in Hyderabad
NDTV.com: Taslima Nasreen attacked in Hyderabad
Exiled Bangladeshi female writer attacked by Muslims in India - International Herald Tribune

12 comments:

  1. இது போன்ற செய்திகளை தவிர்ப்பது சற்றுமுன் பதிவுக்கு நலமானது.

    தஸ்லிமா போன்ற மதநல்லிணக்க எதிரிகளுக்கு ஓசி விளம்பரம் அளிக்காதீர்கள்.

    ReplyDelete
  2. சட்டத்தை காக்க வேண்டிய எம் எல் ஏக்கள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஈடுப்பட்டதை கடுமையாக கண்டிக்கிறேன். இவர்கள் எல் எம் ஏ பதவியை பறிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  3. //தஸ்லிமா போன்ற மதநல்லிணக்க எதிரிகளுக்கு//

    அப்படியா?

    //முந்தைய சற்றுமுன்...: இந்து-முஸ்லீம் கலப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும்: தஸ்லீமா//

    ReplyDelete
  4. தஸ்லிமா வங்கதேசத்தில் கற்பழித்து கொல்லப்படும் இந்து பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து லஜ்ஜா என்ற புத்தகத்தை எழுதியவர். அதனால் தான் இஸ்லாமிய மத வெறியர்களால் அவர் தாக்கப்படுகிறார்.இந்த மதவெறி கும்பலில் எம் எல் ஏக்கள் இருப்பது வெட்கக்கேடான விசயம்

    ReplyDelete
  5. அந்த MLAக்களை வன்மையாக கண்டிக்கிறேன். இது காட்டுமிராணடித்தனம். மக்கள் பிரத நிதிகளை இவ்வாறு நடந்துக்கொண்டால் எப்படி..

    என்னமோ..

    எல்லாம் தரம் தாழ்ந்துவிட்டது!

    ReplyDelete
  6. இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. எழுத்தாளர் என்கிற முறையில் இவர்களின் சங்கங்கள் குரல் கொடுக்கவேண்டும்.

    தஸ்லிமா எழுதிய புத்தகத்திற்கு எழுத்து மூலமாக தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து இருக்கலாமே.

    எனக்கு என்னமோ இந்த பிரச்சினி விசுவ ரூபம் எடுக்கும்போல் தெரிகிறது.

    என் பங்குக்கு என் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  7. அவர்கள் மக்கள் பிரதிநிதி அல்ல. முஸ்லீம் பிரதிநிதிகள்..

    ReplyDelete
  8. Indian government should give protection to Taslima by making granting herIndian citizenship.

    Taslima is a courageous woman.

    ReplyDelete
  9. நம்ம மரம் வெட்டியோ,ரம்ஜான் கஞ்சி மஞ்ச துண்டோ இதை கண்டித்து அறிக்கை ஒண்ணும் விடலயே.

    ReplyDelete
  10. //Indian government should give protection to Taslima by making granting her Indian citizenship.//

    இந்த மாதிரியெல்லாம் கோரிக்கை வைக்கபடாது.அப்புறம் நாங்க முஸ்லிம் ஓட்டு பொறுக்கறது எப்படி?

    ReplyDelete
  11. வெட்கக்கேடான விஷயம். அதுவும் ச.ம.உ-க்களாம். மகாகேவலம்.

    //இது போன்ற செய்திகளை தவிர்ப்பது சற்றுமுன் பதிவுக்கு நலமானது.//

    மொதல்ல 'இதை போன்ற' "முகமற்ற" அனானிகளின் பின்னூட்டங்களை தவிர்ப்பது நலமானது.

    பாவங்க அந்த அம்மனி. கொஞ்சம் குழப்பம் + பயந்து இருக்காங்க.

    இவரின் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல்களை எந்த முஸ்லீம் அமைப்புகளும் கண்டிக்காதது எதிர்ப்பார்க்கக்கூடியதே.

    //Indian government should give protection to Taslima by making granting herIndian citizenship.

    Taslima is a courageous woman.//

    Yes!

    //நம்ம மரம் வெட்டியோ,ரம்ஜான் கஞ்சி மஞ்ச துண்டோ இதை கண்டித்து அறிக்கை ஒண்ணும் விடலயே.//

    விட்டுட்டா தமிழ்நாடே வெள்ளாக்காடா ஆகிடும்டா...

    ReplyDelete
  12. தஸ்லிமா நஸ்ரின் என்கிற துணிச்சல் மிக்க புதுமைப்பெண் பாரட்டப்பட வேண்டியவர். அவருடைய கருத்துக்கள் சிந்தனையை தூண்டுபவை.
    உதாரணத்திற்கு ஒன்று!

    'If any religion allows the persecution of the people of different faiths, if any religion keeps women in slavery, if any religion keeps people in ignorance, then I can't accept that religion.'

    மதவெறியர்கள் இப்படிப்பட்ட பேச்சை எவ்வாறு பொறுத்துக் கொள்வார்கள்?

    ReplyDelete