தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் வகையில் சட்டம் கொண்டு வரும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது, மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இது தொடர்பாக கூறியதாவது: எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள், தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு அமல் செய்ய வேண்டும் என்று பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் வகையில் சட்டம் கொண்டு வர மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. இவ்வாறு அமைச்சர் சுப்புலட்சுமி கூறினார்.
நன்றி: தினமலர்
No comments:
Post a Comment