"இந்த நிறுவனங்களை தமிழகத்தில் ஆரம்பிப்பதன் மூலம், உயர் கல்வியில் தமிழகம் உயரிய நிலையை அடைய முடியும். இந்தக் கல்வியை பயில ஆர்வமாக உள்ள தமிழக மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும்.என்று கூறியுள்ளார் கருணாநிதி.
மேலும் தமிழகத்தில் தொழில் மயமாக்கல் மற்றும் வேலைவாப்பு பெருக்கம் ஆகியவற்றுக்கும் இவை பெருமளவில் உதவும்.
நாட்டு நலன் மற்றும் சக்தியில் அறிவியல் தொழில்நுட்பம் முக்கிய இடம் வகிக்கிறது. எனவே திறமையான பொறியாளர்கள், விஞ்ஞானிகள், நிர்வாகிகளை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்விக்கு தமிழகம் எப்போதுமே முதலிடம் கொடுத்து வருகிறது. இங்கு கிடைக்கும் திறமையான மனித சக்தியின் மூலம் பெருமளவிலான தொழில் மற்றும் வர்த்தக முதலீடுகளை தமிழகம் ஈர்த்து வருகிறது.
மாவட்ட அளவில், ஒவ்வொரு தாலுகாவிலும் அரசு உதவியுடன் கல்லூரிகள், உயர் தரமான பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கையையும் நான் வரவேற்கிறேன்"
Sunday, August 19, 2007
மதுரை, கோவை, திருச்சியில் உயர்கல்வி நிறுவனங்கள் - கருணாநிதி கோரிக்கை!
நாட்டில் அதிக அளவில் ஐஐடிக்கள், ஐஐஎம்கள் தொடங்கப்படும் என்று சுதந்திர தின உரையின்போது பிரதமர் மன்மோஹன்சிங் தெரிவித்ததை வரவேற்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி அதன்படி மதுரையில் ஐஐடி, கோவையில் ஐஐஎம், திருச்சியில் இந்திய அறிவியல், கல்வி ஆய்வுக் கழகம் ஆகியவற்றை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
No comments:
Post a Comment