அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நடுவண் அரசின் சமூகநீதி அமைச்சு மற்றும் பழங்குடியினர் அமைச்சுக்கள் சரிவர பயன்படுத்தவில்லை என தலைமை கணக்கு ஆய்வாளரின் அறிக்கை கூறுகிறது. மற்ற மாணவர்களுக்கும் இந்த மாணவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி வளர்ந்து வருவதாக அந்த அறிக்கை சுட்டுகிறது. கல்வி வளர்ச்சியின் இரு எடுத்துக்காட்டுகளாக மொத்த பதிகை விகிதம்(Gross Enrolment Ratio) மற்றும் மொத்த வெளியேறும் விகிதம் (Gross Dropout Ratio) ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நிலை கீழ்நோக்கி செல்வதை காட்டுகிரது. வெளியேறும் விகிதம் பொது மாணவர்களுக்கு 6.7%ஆகவும் இவர்களுக்கு 15.1% ஆகவும் 2001இல் இருந்தது 2003-04 ஆண்டில் 10.4% ஆகவும் 16.6% ஆகவும் மோசமாவதை சுட்டியுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவழிக்காதது, தாமதமாக அல்லது குறைவாக பட்டுவாடா செய்தது, வேறு திட்டங்களுக்கு மாற்றியது போன்ற குறைகள் மற்றும் இத்திட்டத்தை பொதுமக்கள் அறியுமாறு விளம்பரம் செய்யாதது இந்த இடைவெளி வளர்வதற்கு காரணங்களாக அவ்வறிக்கை கூறுகிறது.
DNA - India - CAG finds fault in SC, ST education schemes - Daily News & Analysis
No comments:
Post a Comment