கண்ணன் பிறந்த நாளன்று மராட்டிய இளைஞர்கள் உரி கட்டி அதனை மனித மலை எழுப்பி கைக்கொள்வது ஒரு பாரம்பரியமான செயலாக இருந்தூ வந்தது. தயிர்பானை எனப்பொருள்படும் தஹிஹண்டியை 'கோவிந்தாக்கள்' எனப்படும் இளைஞரணி அடித்து எடுக்கும்போது தற்காலங்களில் அதில் பணம் வைப்பது வழக்கமானது. ஆறு அல்லது ஏழு கட்ட மனித பிரமிட்கள் உருவாவது பிரமிப்பாக இருக்கும்.இந்த விளையாட்டு வாக்குவங்கியில் பிரபலமாக இருப்பதைப் பார்த்து அரசியல் கட்சிகள் வாளாவிருக்குமா? மராட்டிய கட்சிகள் அனைத்தும் களத்தில் குதித்து இப்போது இது பயங்கர பணம் காய்க்கும் கூட்டம் சேர்க்கும் நிகழ்வாக மாறிவிட்டது. இவ்வருடம் 40 அடி உயரத்தில் ஒன்பது அடுக்குகள் கொண்டே எட்டக் கூடியனவாகவும் இலட்சக் கணக்கான பரிசுப்பணத்தை புரவலர்கள் கொடுத்தும் பிரம்மாண்ட நிலையை அடைந்துள்ளது. இது பங்கெடுப்போரின் உயிருக்கே ஆபத்தாகக் கூடிய நிலை என மஸ்கான் தாட்வாடி கோவிந்தா மண்டலின் தலைவர் யஸ்வந்த் ஜாதவ் கூறுகிறார்.
மேல் விவரங்களுக்கு...Mumbai politicos high on hitting Janmashtami jackpot
No comments:
Post a Comment