புதுதில்லி உட்பட நாட்டின் முக்கிய தொடர் வண்டி நிலையங்களை உலகத் தரத்திற்கு உயர்த்த இந்திய இரயில்வே முடிவு செய்துள்ளது. நாட்டில் உள்ள 22 தொடர்வண்டி நிலையங்களை உலகத்தரத்திற்கு உயர்த்த தேர்வு செய்துள்ளது.
அதன் முதற்கட்டமாக புதுதில்லி, பாட்னா, ஆக்ரா, ஆனந்த விகார், ஜெய்ப்பூர், அமிர்தசரஸ் ஆகிய நிலையங்களில் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
ஹாங்காங்கைச் சேர்ந்த டெர்ரி பெரல் என்ற நிறுவனம் புதுதில்லி நிலைய பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளது.
தினமணி
No comments:
Post a Comment