இந்திய வரையறை நேரத்தை அரைமணிநேரம் முன்னே வைப்பதால் மின்சக்தி/எரிசக்தி பயன்பாட்டில் கணிசமான சேமிப்பு ஏற்படும் என்றும் பண அளவில் ரூஆயிரம் கோடிவரை மிச்சமாகும் என்றும் விஞ்ஞானிகள் குழுவொன்று பரிந்துரைத்துள்ளது. இப்படிச் செய்தால் கிரீன்விச் நடுமட்ட நேரத்தைவிட இப்போதிருக்கும் ஐந்தரை மணி நேரம் முன்னிருப்பதற்கு பதிலாக ஆறுமணி நேர இடைவெளி இருக்கும். தற்போது 82.5 பாகை கிழக்கு நெடுக்கோட்டில் (East Longitude) உள்ள நேர வரையறை 90 பாகைக்கு மாற வேண்டும். சக்தி சேமிப்பிற்காக மற்றநாடுகள் ஒன்றிற்கு மேற்பட்ட நேர மண்டலங்களை வைத்திருந்தாலும் இந்தியாவிற்கு அவை சரிப்பட்டு வராது என இக்குழு கருதுகிறது.
இக்குழுவின் அறிக்கையின் விவரங்களுக்கு....India eNews - Advance IST by 30 minutes, save Rs.10 bn: scientists
இனி கௌஹாத்தி கிரிக்கெட் ஆட்டங்கள் 9 மணிக்கே ஆரம்பிக்க வேண்டியதில்லை :)
ReplyDelete