
தமிழ்நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு கட்டியவீடுகளை முதல்வர் கருணாநிதியிடம் கொடுத்த ஆன்மிகத் தலைவர் மாதா அமிர்தானந்தமயி , எல்லோராலும் 'அம்மா' என அழைக்கப் படுபவர், வெள்ளியன்று இலங்கை பயணம் மேற்கொள்கிறார்.
இலங்கை அதிபர் மகேந்திர ராஜபக்ஷெயின் அழைப்பினை ஏற்று செல்லும் அவர், அவரது மடம் அங்கு சுனாமியால் பாதிப்ப்படைந்தவர்களுக்கு கட்டிய வீடுகளின் சாவிகளை அவரிடம் ஒப்படைப்பார் எனத் தெரிகிறது. மேற்கு மாநிலத்தில் கலுதராவிலும் கிழக்கு மாநிலத்தில் அம்பாரையிலும் சேர்ந்து 600 ச.அடி கொண்ட 96 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இதற்கு முன்னரும் 'அம்மா' இலங்கை சென்று சுனாமி மறுவாழ்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
No comments:
Post a Comment