இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசாங்கப் படையினருக்கும் இடையிலான எறிகணை மோதல்களால் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை, கடந்த மூன்று நாட்களில் மட்டும் நாற்பதாயிரத்தைத் தாண்டிவிட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரியான டேவிட் விக்னாத்தி கூறியுள்ளார்.இதன் மூலம் அந்த மாவட்டத்தில் கடந்த கால மோதல்களால் இடம்பெயர்ந்து தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபதினாயிரத்தைத் தாண்டிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அங்கு இடம்பெயரும் மக்களின் என்ணிக்கை திடீரென அதிகரித்து வருவதால், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் கூறுகிறார்கள்.
BBCTamil.com
No comments:
Post a Comment