குவஹாத்தி அருகிலுள்ள ஒரு வாராந்திர மொத்த விற்பனைச் சந்தையில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் இருவர் பலியாயினர். காயமடைந்தோர் 42 பேராகும். அவர்களுள் 32 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இறந்தவர்களில் 55 வயதுடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதுவும் உல்ஃபா பயங்கரவாதிகளின் சதியாக இருக்கலாம் என்று தெரிகிறது.
மரித்தவர்களுக்கு ரூ.3 இலட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.பத்தாயிரமும், சிகிச்சை வசதியும் அளிக்கப்படும் என்று மாநில சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
பி/டி/ஐ செய்தி
No comments:
Post a Comment