வங்கதேச முன்னாள் பிரதமரும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனா வாஜித் அவரது டாக்கா இல்லத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.
ஹசீனா மீது தொழிலதிபர்களை மிரட்டியது, ஊழலில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் வெளிநாடு சென்று விட்டார். அவர் வங்கதேசம் திரும்பினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட அவரை ஒரு மாத காலம் காவல்துறை காவலில் வைத்திருக்க நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. அவரின் குற்றவிபரம் தெரிவிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment