வியாழனன்று ULFA தீவிரவாதிகளுக்கும் அசோம் காவலர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொலையுண்ட, பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த ்இணவுக் இந்திய உணவுக் கழகத்தின் (FCI) நிர்வாக இயக்குனர் பி.சி இராமின் உடலை அவரது மகன் பிரவீன் கௌதம் இன்று அடையாளம் கண்டார். தனது மாமாவுடன் தங்கள் வசிப்பிடமான காசியாபாத்திலிருந்து கௌஹாட்டி வந்தவர் இம்முறை எந்த ஐயமுமின்றி தனது தந்தையின் உடலே எனக் கூறினார். இதன் முன்னர் ஜூன்30 அன்று இதேபோல மற்றொரு உடலை அடையாளம் கண்டபின் உர்ருக்குச் சென்று ஈமக்கடன்களை ஆற்றியபின் ராம் தொலைபேசியில் அவர்களை தொடர்பு கொண்டு தான் ULFA பிடியில் நலமாக இருப்பதாகக் கூறி பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி..Khabrein.info
No comments:
Post a Comment