குடியரசு தலைவர் தேர்தலுக்காக வந்த வேட்புமனுக்களில் பிரதீபா பாடீலின் நான்கு மனுக்களும் சேகாவத்தின் இரு மனுக்களும் சரியாக இருப்பதாக இத்தேர்தலின் கண்காணிப்பு அதிகாரி, மக்களவையின் தலைமைச்செயலர் பிடிடி ஆச்சாரி தெரிவித்தார். மற்ற 72 பேர்களின் மனுக்கள் தேர்தல் விதிகளின்படி இல்லை என்று தள்ளுபடி செய்தார். இனி ஜூலை 4 அன்று போட்டியிலிருந்து இருவரில் ஒருவர் விலகிக் கொள்ளவில்லை என்றால் ஜூலை 19 அன்று தேர்தல் நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை ஜூலை 21 அன்று நாடாளுமன்றத்தின் அலுவலகத்தில் நடைபெறும்.
DNA - India - Patil, Shekhawat locked in straight fight in Prez poll - Daily News & Analysis
No comments:
Post a Comment