தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்தட்டுப்பாடு நிலவுவதாக குற்றஞ்சாட்டிய ஜெயலலிதாவுக்கு பதிலளிக்கும் விதமாக, தடையற்ற, தரமான மின்சாரம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள அவர், தற்போது புதிதாக 10,000 டிரான்ஸ்பார்மர்கள் வாங்கி மாற்றியமைக்கப்பட்டு மின்தடை குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
அதிமுக ஆட்சியின்போது 14,000 டிரான்ஸ்பார்மர்கள் வாங்காத காரணத்தால், புதிய டிரான்ஸ் பார்மர்களுக்கு பற்றாக்குறை நிலவியதாகக் குறிப்பிட்டு, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் அறிவிப்பையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
மக்கள் தொ.கா
Apdiyaa???
ReplyDeleteAsk Karunanithi to come and live in Kotturpuram..
Ha ha ha ... Nalla Joke...