தென் ஆப்ரிக்க முன்னாள் கேப்டன் கெப்ளர் வெசல்ஸ் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணி புரிவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
பயிற்சியாளர் விவகாரத்தில் ஆதரவு கேட்டு மூத்த இந்திய வீரர்கள் சிலரின் உதவியை நாடியுள்ள அவர் இதுதொடர்பாக தனது ஏஜெண்ட் லிகர்வுட் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் (பிசிசிஐ.) தொடர்புகொண்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் போட்டியில், ஜான் டைசன் (ஆஸ்திரேலியா), டெர்ரி ஆலிவர் மற்றும் நாஸ்வொர்த்தி ஆகியோர் ஏற்கனவே களமிறங்கியுள்ளனர்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு, தற்காலிக அணி மேலாளராக சந்து போர்டே நியமிக்கப்பட்டது 'சற்றுமுன்' வாசகர்கள் அறிந்ததே.
No comments:
Post a Comment