மாநிலத்தின் ஆரம்பக்கல்வி மற்றும் அடிப்படைக்கல்வி வளர்ச்சிக்காக ரூபாய் ஆறாயிரம் கோடிவரை அரசு செலவிட திட்டமிட்டு இருப்பதாக பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். மதுரை அருகே அலங்காநல்லூரில் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளையும் வாயுஅடுப்புக்களையும் வினியோகிக்க நடந்த ஒரு விழாவில் அமைச்சர் பேசும்போது இவ்வாறு கூறினார். இதில் 50 விழுக்காடு வரை நடுவண் அரசின் சர்வ சிக்சா அபியான்(SSA) மூலம் கிடைக்கும் என்றார். தரம் உயர்த்தப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் ் இவ்வருடமே சரியான எல்லைச்சுவர்களும் வகுப்பறைகளும் கட்டித் தரப்படும் என்றார்.
425 பேருக்கு தொலைக்காட்சிப்பெட்டிகளும் 241 பேருக்கு இலவச வாயு அடுப்புக்களும் அமைச்சர் கொடுத்தார்.
The Hindu News Update Service
No comments:
Post a Comment