குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தின் தலைவரான பொன்னம்பல அடிகளார் திண்டுக்கல் அருகே நடந்த கார்-டிரக் மோதலில் காயமெதுவும் இன்றி தப்பினார்.திருப்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகே இவ்விபத்து நிகழ்ந்ததாக மடத்து அதிகாரிகள் கூறினர். கார் மிகவும் சேதமடைந்தபோதும் அடிகளாருக்கோ உடன் சென்றவருக்கோ ஒட்டுனருக்கோ எவ்வித காயமும் ஏற்படவில்லை எனக் கூறினர். மற்றொரு காரில் அடிகளார் தமது திருப்பூர் பயணத்தை தொடர்ந்தார்.
The Hindu News Update Service
No comments:
Post a Comment