இரண்டரை மாத விசாரணைக்குப் பிறகு பாப் உல்மர் மரணம் இயற்கையானது தான் என்று ஜமைக்கா காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். அடுத்தவாரம் இதுபற்றி முறைப்படி அறிவிக்கப்படுமாம்.
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி அயர்லாந்திடம் தொடக்கத்திலேயே தோல்வியைத் தழுவி வெளியேற, அதைவிட அதிர்ச்சியாய் அதன் பயிற்சியாளர் பாப் உல்மர் மரணம் அமைந்தது.
கொலை, மாஃபியா கும்பல், சூதாட்டம், விஷம், துணை பயிற்சியாளர் முஸ்தாக் அகமது, அல்காயிதா என்று பல அனுமானங்களை ஊடகங்களில் உலவவிட்டபடி இருந்த இம்மரணம், ஜமைக்கா காவல்துறையினரின் இந்தக் கருத்தால் முடிவுக்கு வரக்கூடும்.
டைம்ஸ் ஓஃப் இந்தியா
No comments:
Post a Comment