இந்தியாவின் மத்திய மாநிலமான சத்தீஸ்கரில், மாவோயிஸ்டுகளின் பதுங்கு தாக்குதலில் கொல்லப்பட்ட காவல்படையினர் 23 பேரின் சடலங்களை தாம் இப்போது கண்டெடுத்திருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.காட்டின் நடுவே மறைவான ஒரு இடத்தில், மாவோயிஸ முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக வந்த செய்திகளை விசாரிக்க நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட படை நடவடிக்கையின் போது, கொல்லப்பட்ட இந்தப் பாதுகாப்பு படையினரோடு தமக்கு இருந்தத் தொடர்பை அதிகாரிகள் இழந்ததாக அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.
போலீசாரின் அறிக்கையின்படி கிளர்ச்சியாளர்கள் 500 பேர் வரை இப்பதுங்குத் தாக்குதலை நடத்தினார்கள் என்றும், கிளர்ச்சியாளர்கள் 40 பேர் வரை உயிரிழந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல தசாப்தங்களாக இப்பகுதியில் நடந்துவரும் மாவோயிஸ சண்டைகளில் இதுவரை 6000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
- BBC Tamil
BBC NEWS | South Asia | Dozens die in India Maoist clash


