.

Thursday, April 19, 2007

ஈராக் குண்டுவெடிப்பு பலி 172 ஆக உயர்வு.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்தது.ஈராக்கின் மத்திய மற்றும் புறநகரில் ஷியா பிரிவு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து 5 இடங்களில் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷியா பிரிவினர் அதிகமிருக்கும் சத்ரியா என்ற இடத்தில் உள்ள மார்க்கெட்டில் பஸ் ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து 90 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதுபோன்ற பல்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்தது. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...