.

Saturday, July 28, 2007

பாலாற்றில் அணை கட்ட ஆந்திர அரசு தீவிரம்.

ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த கணேசபுரம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்ட முடிவு செய்துள்ளது. இந்த அணை கட்டினால் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்பட 5 மாவட்டங்கள் வறண்டு விடும் அபாயம் உள்ளது. கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும். இந்த அணை கட்டுவதற்கு அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பா.ம.க. சார்பில் அணை கட்டும் பகுதிக்கு சென்று போராட்டமும் நடத்தப்பட்டது.

இந்த அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனாலும் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதில் ஆந்திர அரசு தீவிரமாக உள்ளது. அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டி, பொதுப்பணித்துறை மந்திரி, நீர்ப்பாசனத்துறை மந்திரி மற்றும் எம்.எல்.ஏ.க்கள், குப்பம் பகுதியில் உள்ள விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடத்திற்கு செல்ல தனிபாதை ஒன்றும் வேகமாக அமைக்கப்பட்டது. அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இது தவிர ஆந்திர- தமிழக எல்லைப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆந்திர அரசின் அனுமதி இல்லாமல் அணை கட்டும் பகுதிக்குள் அத்துமீறி நுழை பவர்களை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாலைமலர்

ஆகஸ்ட் 3 முதல் சென்னைக்கு கிருஷ்ணா நீர்

கருணாநிதி கோரிக்கை ஏற்பு

தமிழக முதலமைச்சர் கருணாநிதி சென்னை மாநகரின் குடிநீர்த் தேவைக்காக, கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து ஆகஸ்டு முதல் வாரத்தில் தண்ணீரைத் திறந்து விட அறிவுரைகள் வழங்குமாறு ஆந்திர முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டிக்கு 20.7.2007 அன்று கடிதம் எழுதி இருந்தார்.

முதல்-அமைச்சர் கருணா நிதியின் கோரிக்கையை உடனடியாக ஏற்று ஆந்திர மாநில முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டி தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சென்னை மாநகரின் குடிநீர்த்தேவையை நிறைவு செய்வதற்காகக் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து 3.8.2007 முதல் தண்ணீர் திறந்து விடுவதற்குத் தெலுங்கு கங்கைத் திட்டத்தின் தலைமைப் பொறியாளருக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மாலைமலர்

ஆந்திர மாநிலத்தில் 9 பேர் போலிசாரால் சுட்டுக் கொலை !

ஜூலை 28, 2007 ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற 'பந்த்' தின் போது ஏற்பட்ட வன்முறையறையை கட்டுப்படுத்த எடுத்த போலிசார் நடவடிக்கையில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து எதிர்கட்சிகள் முதல்வரை பதவி விலக் கோரி அறிக்கை விடுத்துள்ளனர்.

********

தட்ஸ் தமிழில் இதுபற்றிய வந்த செய்தி குறிப்பு

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற பந்த்தில் பெரும் வன்முறை மூண்டது. போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகினர்.

ஆந்திர மாநிலத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் நிலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயனடைந்த பெரும்பாலானவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என தெலுங்குதேசம் மற்றும் பாஜக கடும் கண்டனம் தெரிவித்தன.

அரசின் விரோத போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏழை விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலையும், ஆளும் காங்கிரசின் அராஜக செயலையும் கண்டித்து இன்று பிரதான எதிர்க்கட்சிகள் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

ஆனால் எதிர்க்கட்சிகள் விடுத்த பந்த்தை மீறி ஆந்திரா அரசு இன்று நகரில் பஸ் மற்றும் ரயில்களை இயக்கியது. இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவின் பல இடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகளின் மீது தெலுங்குதேசம், பாஜகவினர் அடித்து நொறுக்கினர். ரயில் மறியலும் நடந்தது.

இந்த பந்தையொட்டி அனைத்து கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், கடைகள், தனியார் பேருந்துகள் எதுவும் இயங்கவில்லை.

பல்வேறு இடங்களில் நடந்த வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாயினர்.

அப்துல்கலாம் வாசித்த கவிதை.

காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்களிடையே நேற்று உரை நிகழ்த்திய அப்துல்கலாம், கவிதை ஒன்றும் வாசித்தார். ஒவ்வொரு மாணவரையும் தொடர்ந்து வாசிக்கவும் கேட்டுக்கொண்டார்:

இறைவா! நீ மனித குலத்தை
சிந்திக்கும் திறனுடன் படைத்துள்ளாய்
ஆராயும் திறனை தந்துள்ளாய்
மனிதன் தைரியத்தன்மை
அடைய உண்மையாய் அருள வேண்டும்!
எந்நாட்டு மக்கள் மனதில் அன்பான
எண்ணங்கள், செயல்கள் ஊற்றெடுக்க வேண்டும்
இந்நாட்டில் பிளவு சக்திகள் முறியடிக்க வேண்டும்
என் தேசத்தில் அனைத்து மத
தலைவர்களுக்கும் நல் அருள் புரிய வேண்டும்!
கொள்கைகளில் வேறுபாடு களைய வேண்டும்
எல்லா அமைப்புகளுக்குள்ளும்
நாட்டு மக்களுக்குள்ளும்
விரோத தன்மையில்லாமல் மக்களை
நல்வழி காட்டுவாயாக!
தனி மனிதனை விட தேசம் முக்கியம்
என்ற எண்ணம் மக்கள், தலைவர்கள்
மனதில் மலர செய்வாயாக!
அமைதி கொழிக்கும் தேசமாக வளர
பாடுபட்டு உழைக்க நல் அருள் புரிவாயாக!

காவல்துறையினர் செய்யும் பொதுமக்கள்அலைகழிப்பு களையப்படும். - ஐ.ஜி

விழுப்புரம் சரக காவல்துறை சார்பில் விழுப்புரம், கடலூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு பொதுமக்களிடம் நன்மதிப்பை பெறுவது குறித்த 1 வார கால பயிற்சி தொடக்க விழா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக லிப்ரா அரங்கில் நடந்தது.

பயிற்சிக்கு அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ரத்தின சபாபதி தலைமை தாங்கினார். விழுப்புரம் சரக உதவி பொது ஆய்வாளர் (டி.ஐ.ஜி) வன்னிய பெருமாள் வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரியய்யா, கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பயிற்சியை சென்னை வடக்கு மண்டல பொது ஆய்வாளர் ((ஐ.ஜி)) ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர்,

தமிழக காவல் துறையில் அறிவாற்றல், திறமை, மனப்பாங்கு ஆகிய 3 அம்சங்கள் உள்ளது. அதில் அறிவாற்றல், திறமை போலீசாரிடம் உள்ளது. மனப்பாங்கு மட்டும் தேவைப்படுகிறது.

பொதுமக்களிடம் போலீசார் 2 விதத்தில் மட்டும் நன்மதிப்பை பெற்றுள்ளனர். குற்றங்களை கண்டு பிடித்தல், கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் திறமையாக செயல்படுகிறார்கள்.

போலீசார் நடந்து கொள்ளும் முறையைதான் குறைத்து மதிப்பிடுகிறார்கள். நாம் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெறும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய பணி நல்ல பணி. தமிழ்நாட்டு காவல் துறை மிக உயர்ந்த பணியை செய்துவருகிறது. இதனை யாராலும் மறுக்க முடியாது.

மதவாத, சாதிய, மொழிய, வட்டார சண்டை சச்சரவுகள் அதிகமாக உள்ளது. காவல்துறை மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும். மற்ற வேறு எந்த துறையாலும் கட்டுப்படுத்த முடியாது.

14 மாதம் ஐ.ஜி.யாக வேலைபார்த்து வருகிறேன். தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தமிழக காவல்துறையை பாராட்டியுள்ளார்.

போலீஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு மன கஷ்டம் இல்லாமல் நம்முடைய வேலையை செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) போடுவதில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இது போன்ற மாற்றங்களை ஏற்படுத்தத்தான் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.


இவ்வாறு ராதா கிருஷ்ணன் கூறினார்.

ஜல்லிக்கட்டுக்கு தடை! - உச்சநீதிமன்றம்.

சர்ச்சைகளுக்கிடையே ஒவ்வொரு பொங்கல் விழாக்கொண்டாட்டங்களின் போதும் வீரவிளையாட்டான 'ஜல்லிக்கட்டு'க்கு இடப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் விலக்கி வைக்க... மேல்முறையீட்டைக் கேட்ட உச்சநீதிமன்றமோ இறுதி உத்தரவு வரும்வரை தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மிருகவதை தடுப்புச்சட்டம் 1960ஐ முன்வைத்து விலங்கின நல வாரியத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் வாதாடினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், தருண் சாட்டர்ஜி, ஆர்.வி ரவீந்திரன் அடங்கிய நீதிமன்ற குழு (பெஞ்ச்) இத்தீர்ப்பை அளித்தனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அதிரடி தடை * சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு - தினமலர்

சென்னை மாநகரத்தில் 25 வளர்ச்சிப் பணிகள்.

அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

சென்னை மாநகரத்தில் 25 வளர்ச்சிப் பணிகளை 4புள்ளி 45 கோடி ரூபாய் செலவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

ஓட்டேரி வாழைமா நகர் 38- வது வார்டில் 4 புள்ளி 99 லட்ச ரூபாய் செலவில் உடற்பயிற்சிக் கூடம், பச்சக்கல் வீராசாமி தெரு, 56-வது வார்டில் 5 புள்ளி 44 லட்ச ரூபாய் செலவில் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் சத்துணவுக் கூடம், சிட்கோநகர், 63-வது வார்டு 51-வதுதெரு, 10-வது தெரு, 42- வதுதெரு, மற்றும் பிரதானசாலையில் 44 புள்ளி 16 லட்ச ரூபாய் செலவில் அங்கன் வாடி மையங்கள் உட்பட பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஸ்டாலின் வடசென்னை மேலும் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

வைகுண்ட ராஜனும், போஸ்டரும்!

தலைமறைவாக இருக்கும் வைகுண்டராஜன் மீது, புதிய புதிய வழக்குகளைப் போட்டு வருகிறார்கள். அவரை எப்படியாவது கைது செய்து விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது காவல்துறை. ஆனால் முதல்வரோ, "அ.தி.மு.க.வுக்கு பண்ணையார் வெங்கடேஷ் என்கௌன்ட்டர் போல் தி.மு.க.வுக்கு வைகுண்டராஜன் விவகாரம் ஆகிவிடக்கூடாது'' என்று கவனமாக காய் நகர்த்தி வருகிறாராம்.

இதற்கிடையில் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே போஸ்டர்கள் அடித்து ஒட்டி வருகிறது நாடார் தரப்பு. அதில் உள்ள வாசகங்கள், நாடார் சமுதாயத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் வைகுண்டராஜனின் விவகாரத்தை தனிப்பட்ட மோதலாக அந்தச் சமுதாய மக்கள் நினைத்தார்கள்.

ஆனால் டாட்டாவிற்கு தொழிற்சாலை அமைக்க நடைபெறும் நில எடுப்பிற்குப் பிறகு தங்கள் சமுதாயத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாக நினைக்கிறார்கள். இதில் சமுதாய உணர்வு அடங்கிக் கிடக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட முதல்வர் தற்போது, "டாட்டா தொழிற்சாலையில் சமுதாய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்'' என்று அறிக்கை விட்டுள்ளார்.

தமிழன் எக்ஸ்பிரஸ்

Vaikundarajan case takes a new turn :: Chennai Online News Service - View News
The Hindu News Service :: Company MD files anticipatory bail application
Jaya TV partner files petition for bail: ஜெயா டிவி பங்குதாரர் 'தலைமறைவு' - வைகுண்டராஜன் முன் ஜாமீன் கோரி மனு
Zee News - Stiff opposition to Tata`s titanium-di-oxide project in TN: "40,000 families would be displaced as the Tata company is planning to set up the plant on 12,000 acres of land. "

ஷோபா, சினிமோலுக்கு வெள்ளி

அம்மான் (ஜோர்டான்), ஜூலை 28: அம்மானில் நடந்துவரும் ஆசிய தடகள சாம்பியன் போட்டியில் ஹெப்டலத்லான் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

வியாழக்கிழமை நடந்த மகளிருக்கான ஹெப்டத்லான் போட்டியில் ஜே.ஜே. ஷோபா 5356 புள்ளிகளைச் சேர்த்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை சுஸ்மிதா சிங் ராய் 5154 புள்ளிகளைச் சேர்த்து 3-ம் இடத்தைப் பிடித்தார்.

இப் பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனை இரினா நாமென்கோ 5671 புள்ளிகளுடன் தங்கத்தை தட்டிச் சென்றார்.

முன்னதாக நடந்த 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் சினிமோல் பவுலோஸ் 2 நிமிஷம் 6.15 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.

வியத்நாம் வீராங்கனை தான் ஹேங் தங்கம் வென்றார். நேரம்: 2 நிமிஷம் 4.77 வினாடி.

தினமணி

The Hindu : Sport / Athletics : China wins gold in women’s walk
India eNews - Asian athletics: Chitra wins gold, Anju silver

'பா.ம.க. ஒரு புலி' - முதலமைச்சர் கருணாநிதி பேட்டி

புதுடில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் அளித்த பதில்கள்:

செய்தியாளர்: மக்கள் பிரச் சினைகளை நாங்கள் எடுத்துச் சொல்வோம். யாரும் வாய்ப் பூட்டு போட முடியாது என்று பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறி இருப்பதைப் பற்றி?

கலைஞர்: மக்கள் பிரச்சி னைகளை எடுத்து வைக்க வேண்டாமென்று நாங்கள் சொல்லவில்லை. அண்ணா ஒரு முறை சட்டப் பேரவையிலே சொன்னார். 1967 ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார் பிலே தேர்தலிலே நின்றார் என்றாலும் கூட, சுதந்திரக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழரசுக் கழகம், சோஷலிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளை எல்லாம் கூட்ட ணியாகச் சேர்த்துக் கொண்டு, அந்தத் தேர்தலில் அண்ணா ஈடு பட்டார்.

அதிலே நாங்கள் மகத்தான் வெற்றியும் பெற் றோம். கூட்டணியில் உள்ள சிலர் ஓராண்டிற்குப் பிறகு அல்லது சில மாதங்களுக்குப் பிறகு அண்ணா தலைமையில் உள்ள கழக அரசை விமர்சிக் கும்போது சற்றுக் கடுமையாக விமர்சித்தார்கள். அண்ணா விமர்சனங்களுக்கு விரோதி அல்ல. அவரும் தலை சிறந்த ஜனநாயகவாதிதான். அவரிடம் பயின்றவன்தான் நானும்.

அந்த நேரத்திலே அண்ணா - என்னுடைய அரசின் குற்றம் குறைகளை எடுத்துச் சொல்லும்போது சில கட்சிகள் பூனை தன் குட்டியை வாயிலே கவ்வி எடுத்துச் செல்வதைப் போல மென்மையாக எடுத்துச் சொல்கின்றன. சில கட்சிகள் பூனை எலியைப் பிடித்து வாயிலே கவ்விக்கொண்டு செல் வதைப் போல் குற்றம் குறை களைக் கண்டிக்கின்றன என்று அண்ணா சொன்னார். அதற் காக பூனை, குட்டியைக் கவ்வித் தூக்கிக் கொண்டு சொல்லக் கூடாது என்று கூறவில்லை.

செய்தியாளர்: நீங்கள் கூறிய தில் பா.ம.க. பூனையா? எலியா?

கலைஞர்: என் கருத்துப்படி பா.ம.க. ஒரு புலி. நீங்கள் தூண்டிவிடலாம் என்று நினைத் தால், புலி என்ன செய்யும் என்று உங்களுக்கே தெரியும்.

செய்தியாளர்: குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணத் தின் போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் துணை வியாருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டபோது கனிமொழிதான் உடனடியாக ஓடிவந்து அவரை அழைத்துச் சென்று பணிவிடை செய்தார். அதை எல்லோரும் பாராட்டி னார்கள். உங்கள் கவனத்திற் கும் கொண்டு வரலாம் என நினைத்தோம்.

கலைஞர்: நானும் கேள்விப் பட்டேன்.

முழுவதும் படிக்க...

அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

விழுப்புரம் மாவட்டம் ரிஷி வந்தியத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தின்போது பள்ளத்தில் சக்கரம் இறங்கி தேர் கவிழ்ந்தது. இச்சம்பவத்தில், அர்ச்சகர் சோமு, கோயில் பணியாளர் ஜெயராமன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

விடுதலை நாளிதழ்

-o❢o-

b r e a k i n g   n e w s...